நாடாளுமன்ற தொகுதி - தேடல் முடிவுகள்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வாய்ப்பு யாருக்கு?
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுள் 35வது தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி (தனி), திருவாடானை, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு: ராமநாதபுரம் தொகுதியில் 2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக
டீக்கடையில் பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பன்னீர் செல்வம்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணியின் சார்பில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ராமநாதபுரத்தில் அவரது ஆதரவாளர்களுடன் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பட்டிணம்காத்தான் சோதனை சாவடி அருகே தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார். தினமும் சட்டமன்ற தொகுதி வாரியாக ஒன்றிய வாரியாக கிராமங்களுக்கு
மோடி மீண்டும் பிரதமரானால், பொருளாதாரம் மேலும் உயரும் - அண்ணாமலை
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடியில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது,திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும். வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல்
விவிபாட் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் நடவடிக்கை
மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - சீமான் பேச்சு
சிவகங்கை,சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் எழிலரசியை ஆதரித்து , அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கையில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது ,நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பிள்ளைகள் எளிமையான பிள்ளைகள் . இவர்களுக்கு உங்களின் வலியும், வேதனையும் தெரியும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மகன்
தமிழ்நாட்டில் பா.ஜனதா டெபாசிட் கூட வாங்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை பகுதியில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-பானை சின்னம் புகழ் பெற்ற சின்னமாகியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு தலைவர்களுக்கு நான் பிரசாரம்
தமிழகத்தில் வேட்பு மனு பரிசீலனை - 569 மனுக்கள் நிராகரிப்பு
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நேற்றைய தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்பட மாட்டோம் - சீமான் பேச்சு
கன்னியாகுமரி,கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது ,எவ்வளவு நெருக்கடிகள், அழுத்தங்கள் கொடுத்தாலும் அவர்கள் கொடுக்கும் அழுத்தங்கள் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல்ப்படுத்துமே தவிர அச்சப்படுத்தாது. சிதைந்து கொண்டிருக்கும் தமிழ் மொழியை நீட்சித்து எடுக்க
தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது நாளான இன்று (சனிக்கிழமை)